தேங்காய்ப்பால் முறுக்கு
தேவையானவை
வறுத்த
உளுத்தம் பருப்பு மாவு - 1 கப்
அரிசி
மாவு - 4 கப்
தேங்காய்
- 1
வெண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு
- சிறிதளவு
சீரகம்
- சிறிதளவு
தேங்காய்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு
- தேவையான அளவு
செய்முறை:
1.முதலில்மிளகு,
சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக மிக்ஸில்பொடித்துக் கொள்ளவும்.
2.பின்பு
ஒரு பாத்திரத்தில் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு
ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு
பிசையவும்.
3.அடுத்ததாக
தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான
தேங்காய்பால் எடுக்கவும். பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக்
கொள்ளவும்.
4.ஒரு
பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப்
பிசைந்து கொள்ளவும்.
5.முறுக்கு
அச்சில்போட்டு மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு
பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.
6.பாலிதீன்
உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து
போடவும். (அ) வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர்
அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.
7.இரண்டு
பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.
8.முதலில்
பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல்
பிசைந்து முறுக்கு சுட்டெடுக்க வேண்டும்.
Comments
Post a Comment