இறால் இகுரு / ஆந்திரா இறால் குழம்பு

தேவையான பொருட்கள்
  • உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1/4 கிலோ
  • தக்காளி – 1/4 கிலோ
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 3
  • தேங்காய் – 1 /2 மூடி
  • புளி – 1 கோலி குண்டு அளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – 2 கொத்து
செய்முறை

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  2. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
  5. இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
  6. இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
  7. நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார். 

Comments

Popular posts from this blog

புதினா ஒரு மருத்துவ மூலிகை

இள நரை மறையணுமா?

தொட்டாற்சிணுங்கி சூப்